சென்னை:
மது இல்லாத தென்னகம் அமைய ஆந்திரா மாநிலம் வழிவகுக்கட்டும் என ஜெகன்மோகன் ரெட்டிக்கு ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆந்திரத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவேன். இல்லாவிட்டால் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்ற ஜகன்மோகன் ரெட்டியின் அறிவிப்பு பாராட்டத்தக்கது. துணிச்சலானது. மது இல்லாத தென்னகம் அமைய ஆந்திரம் வழி வகுக்கட்டும்! என பதிவிட்டுள்ளார்.