தூத்துக்குடி:
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், தற்போது அரவக்குறிச்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பிரச்சாரத்தில் பேசிய கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தூத்துக்குடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், சிறுபான்மையின வாக்குகளை பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும்.
யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறை சொல்லக்கூடாது எனவும், யாரை திருப்திப்படுத்த கமல் இவ்வாறு பேசி வருகிறார். அந்நிய சக்திகளுக்காக பேசி வரும் கமல் மீது இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.