சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் நியாயவாதி, மனதில் பட்டதை பேசுபவர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்த ரஜினி பேச்சுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ரஜினிகாந்த் நியாயவாதி, நல்ல மனிதர், மனதில் பட்டதை பேசுபவர் எனவும், ஆன்மிகத்தை பொறுத்தவரை ரஜினி கூறியதில் தவறில்லை என தெரிவித்துளள்ளார்.
மேலும், அவரது ரசிகர்கள்தான் பொறுமையாக உள்ளனர். தமிழச்சியை திருமணம் செய்த மனிதரை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.