தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

சென்னை:

அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலையும் மற்றும் வங்கக்கடலில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. 2 கடலிலும் இந்த நிலை உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாளைக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளது. வேறு இடங்களிலும் லேசான மழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 நாளைக்கு முன்பு துவங்கியது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்