அதே பள்ளியிலேயே பொதுத்தேர்வு

அதே பள்ளியிலேயே பொதுத்தேர்வு

சென்னை:

தமிழகத்தில் 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதுமட்டுமல்லாமல், பொதுத்தேர்வை வேறு பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கும் ஆசிரியர்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், 5 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளிகளில்தேர்வு மையம் அமைக்கப்படும் என முந்தைய அறிக்கையை திருத்தி, மாணவர்களுக்கு அதே பள்ளியிலேயே தேர்வு நடைபெறும் என தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்