தார் சாலை அமைக்க பூஜை

தார் சாலை அமைக்க பூஜை

ஒசூர்:

ஒசூர் அருகே சாலை வசதியின்றி தவித்த கிராமத்திற்கு தார்சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து துவக்கி வைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கொலதாசபுரம் கிராமத்தில் 5000 த்திற்கும் அதிகமான குடும்பங்கள் இருப்பதால் இந்த ஒரு கிராமம் மட்டுமே ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

இந்த கிராமத்திற்கு செல்லும் மண்சாலை குண்டும் குழியுமாக வ £கனங்களை ஓட்ட சிரமப்பட்டு வருவதாகவும், தமிழக அரசு தார்சாலை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தநிலையில் இன்று, ஒசூர் ஒன்றிய குழு தலைவர் சசி வெங்கடசாமி கொலதாசபுரம் கிராமத்திற்கு நுழையும் மண்சாலையை ஒருகிலோ மீட்டர் தூரத்திற்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலையாக அமைக்கும் பணிக்கு பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் நாராயணசாமி, ப £கலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயரமன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்