சென்னை:
திராவிடர் விடுதலை கழகத்தின் முற்றுகை அறிவிப்பையடுத்து, நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த 14ம் தேதி சென்னை துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய ரஜினி, பெரியார் குறித்து சர்ச்சை கருத்தை கூறியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வருகிறது.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியதை மன்னிப்பு கேட்க முடியாது என தெரிவித்திருந்தார். இந்நிலையில்,
ரஜினியின் கருத்திற்கு பெரியாரிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவரது இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக திராவிடர் வி டுதலை கழகத்தினர் அறிவித்தனர். அதையடுத்து, போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.