புதுடெல்லி:
முன்னாள் டெல்லி முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்ஷித் மறைவுக்கு, பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஷீலா தீட்ஷித்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், அன்பாகவும், மரியாதைக்குரிய ஆளுமை கொண்டவர் அவர். டெல்லியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை தந்தவர். அவரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி என தெரிவித்திருந்தார்.
Deeply saddened by the demise of Sheila Dikshit Ji. Blessed with a warm and affable personality, she made a noteworthy contribution to Delhi’s development. Condolences to her family and supporters. Om Shanti. pic.twitter.com/jERrvJlQ4X
— Narendra Modi (@narendramodi) July 20, 2019