பெண்கள் பாதுகாப்புக்கு ‘பிங்க்’

பெண்கள் பாதுகாப்புக்கு ‘பிங்க்’

சென்னை:

சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்க, புதிய காவல் ரோந்து வாகனம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த வழக்குகளை விசாரிக்க தமிழக காவல் துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப்பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தலைமையில் செயல்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் காவல் நிலையங்களுக்கென ‘பிங்க்’ ரோந்து வாகனங்கள் வழங்கப்பட உள்ளன.

‘பிங்க்’ ரோந்து வாகனத்தை அடுத்த வாரம் முதல்வர் தொடங்கிவைக்க உள்ளார். விரைவில் தமிழகத்தின் அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கும் இந்த ரோந்து வாகனம் வழங்கப்படவுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்