பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு

  • In General
  • September 16, 2019
  • 243 Views
பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு

மும்பை:
சர்வதேச அளவில் சவுதி அரேபியாவிலிருந்துதான் அதிகளவு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சவுதி அரேபியாவிலிருந்து 98 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் உள்ள கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலை மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் உற்பத்தி தற்போது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக வருகின்ற நாட்களில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்