முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • மே 23க்கு பிறகு ரஜினியின் அரசியல் அறிவிப்பு: சத்ய நாராயண ராவ்

    திருச்சி: நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து மே 23ம் தேதிக்கு பிறகு நல்ல முடிவு வரும் என அவரின் சகோதரர் சத்ய நாராயண ராவ் தெரிவித்துள்ளார். திருச்சி ஓலையூர் அருகே உள்ள குமாரமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள ரஜினியின் தாய் ராம்பாய் – தந்தை ரானோஜிராவின் மணிமண்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தை கடந்த மார்ச் 25 ம் தேதி திறக்கப்பட்டது. இதன் 48வது நாள் மண்டல பூஜை இன்று நடந்தது. இதில் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயண ராவ்

    READ MORE
  • குற்ற வழக்குகளை மறைத்தவர்களுக்கு பணி நியமனம் பெற உரிமை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

    சென்னை: விண்ணப்பத்தில் குற்ற வழக்குகளை மறைத்தவர்களுக்கு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறையில் பணி நியமனம் பெற உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2017ல் நடந்த காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், பலபேர் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், விண்ணப்பத்தில் அதனை மறைத்துள்ளதாகவும், தங்களது விண்ணப்பத்தை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நிராகரித்தை எதிர்த்து பிரவீன் குமார், அழகு ராஜ் உள்ளிட்ட 46 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்நிலையில்,

    READ MORE
  • வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு கோரி திமுக மனு!

    சென்னை: இந்த தேர்தலில் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள்ள 13 வாக்குச்சாவடிகளில் மே 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம், திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு