முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • இந்து தீவிரவாதம் என பேசிய கமலுக்கு தமிழிசை கண்டனம்..!

    சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், தற்போது அரவக்குறிச்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தில் பேசிய கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக பாஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம், இந்து தீவிரவாதம் என பிரச்சாரத்தில் கமல் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கமல் மீது

    READ MORE
  • பஞ்சு ஆலையில் தீ விபத்து; 10 லட்சம் மதிப்பு பொருட்கள் நாசம்!

    சிவகங்கை: சிவகங்கையை அடுத்த சிங்கம்புணரியில், ஒரு தனியார் பஞ்சு ஆலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் தனியார் பஞ்சு ஆலையில், இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீவிபத்தில், சுமார் ரூ.10 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • 1 முதல் 5ம் வகுப்பு வரை சத்துணவுடன் பால்.. தமிழக அரசு ஆலோசனை!

    சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், இலவசமாக 13 வகையான மதிய உணவு மற்றும் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு தினமும் காலையில் ஒரு கப் பால் வழங்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே, இத்திட்டம் பரிசீலிக்கப்பட்டு நடைமுறை சிக்கலால் வைவிடப்பட்டது. தற்போது மீண்டும் பால் வழங்கும் திட்டத்தை அரசு ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு