முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • 8 வழிச்சாலை திட்ட தடை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு  மேல்முறையீடு!

    சென்னை: தமிழகத்தில் சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் ரூ.10,000 கோடி செலவில் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்துவந்த நிலையில், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த திட்டத்துக்கு தடை விதித்தது. 8 வழிச்சாலை அமைப்பதற்கான திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணையை வரும் திங்கட்கிழமை எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம்

    READ MORE
  • ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரிப்பு.. தமிழக அரசு உத்தரவு.!

    சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் இனி தேர்ச்சி மதிப்பெண் மட்டும் பெற்றால் சேர முடியாது என்றும், குறைந்தது 45 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதே போல் பொதுப்பிரிவுக்கு 50 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அதிரடி உத்தரவால் பொதுப்பிரிவு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கல்வியாளர்கள்

    READ MORE
  • மோடி பதவியேற்பு விழாவில் மனைவியுடன் கலந்துகொண்ட ரஜினிகாந்த்!

    புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின், மோடி தலைமையிலான பா.ஜ., அரசு சற்று நேரத்தில் பதவியேற்கிறது. இதற்கான ஏற்பாடுகள் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் தற்போது நடந்து வருகிறது. விழாவில் கலந்துகொள்ள பல்வேறு நாட்டை சேர்ந்த தலைவர்களும், உள்நாட்டு தலைவர்களும் அங்கு வருகைதந்துள்ளனர். இந்நிலையில், பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் பங்கேற்றனர்.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு