முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • தூத்துக்குடியில் விண்வெளி நிலையம்

    சென்னை: தமிழகத்தில் விண்வெளி நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் சிவன் கூறுகையில், நாட்டின் இரண்டாவது விண்வெளி நிலையம் தூத்துக்குடியில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார். மேலும், ‘சந்திரயான் 3’ திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்தாகவும் அவர் தெரிவித்தார்.

    READ MORE
  • ரூ.5க்கு புடவை; ரூ.1க்கு லுங்கி

    வந்தவாசி: வந்தவாசி துணிக்கடை ஒன்றில் ரூ.5 க்கு புடவையும், ரூ.1க்கு லுங்கியும் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பால் கடை முன் ஏராளமான மக்கள் குவிந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள பஜார் சாலையில் சர்கார் சில்க்ஸ் என்ற துணிக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடை தனது 51ம் ஆண்டு விழாவை கொண்டாடியது. இதனையொட்டி, இன்று முதல் 3 நாட்களுக்கு ரூ.5 நாணயத்துக்கு புடவையும், ரூ.1 நாணயத்துக்கு லுங்கியும் விற்பனை செய்யப்படும் என என கடை உரிமையாளர்

    READ MORE
  • ஓட்டு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு

    ஒசூர்: ஒசூர் பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிக்கள், எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஒன்றியம் உட்பட 4 ஒன்றியங்களில் நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள், பாதுகாப்பு வளையத்திற்குள் எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 27 அன்று முதல்கட்டமாக ஒசூர்,தளி ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30அன்று சூளகிரி,கெலமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவுகள் நடைப்பெற்றன. ஒசூர் ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகளில்

    READ MORE
  • குடிநீர் பிரச்சனை: முதல்வர் தலைமையில் ஆலோசனை!

    சென்னை: தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டிய திட்டங்கள் குறித்தும், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் முதல்வர் ஈடுபட்டுள்ளார். மேலும், கேரளாவிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் பெறுவது தொடர்பாகவும் முதல்வர் முடிவெடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

    READ MORE
  • போலீஸ் ரத்ததான முகாம்..! முதல்வர் துவக்கம்..!!

    சென்னை: சென்னையில் போலீசாரின் ரத்ததான முகாமை முதல்வர் இன்று தொடங்கிவைத்தார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், காவலர்கள் ரத்ததானம் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை துவக்கிவைத்தார் தமிழகம் முழுவதும் 81 இடங்களில் நடைபெறும் இந்த ரத்ததான முகாம்களில் 13 ஆயிரத்து 868 காவலர்கள் ரத்த தானம் வழங்குகின்றனர்.

    READ MORE
  • கேரள தண்ணீரை பெற தமிழக அரசு மறுப்பு!

    சென்னை: தமிழகத்துக்கு ரயில் மூலம் 20 லட்சம் தண்ணீரை கொடுக்க முன்வந்தநிலையில், அதனை  தமிழக அரசு மறுத்துள்ளது. தமிழக முதல்வர் அலுவலகத்தின் வேண்டுகோள் விடுத்தால், திருவனந்தபுரத்திலிருந்து 20 லட்சம் தண்ணீரை ரயில் மூலம் சென்னைக்கு அனுப்ப கேரள அதிகாரிகளுக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவவில்லை எனவும், தற்போதைய நிலையை தமிழக அரசே சமாளிக்கும் எனவும் கேரள அரசுக்கு தமிழக அரசு பதிலளித்துள்ளது. தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ரயில்கள்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு