நித்யானந்தா பாஸ்போர்ட் ரத்து

நித்யானந்தா பாஸ்போர்ட் ரத்து

புதுடெல்லி:

நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஸ் குமார் தெரிவித்துள்ளார்.

பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டுவரும் நித்யானந்தா, ஈகுவடார் நாட்டில் ஒரு தனி தீவை வாங்கியுள்ளதாகவும் ‘கைலாஸ்’ தனி நாடு அமைக்கப்போவதாகவும் தகவல் வெளியானது.

இதனையடுத்து, தங்கள் நாட்டின் தீவு எதையும் அவர் வாங்கவில்லை எனவும், தற்போது ஹைதி நாட்டுக்கு தப்பிச்சென்றுவிட்டதாக ஈகுவடார் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறுகையில், நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவரின் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. நித்தியானந்தா பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்படும் நபர் என்பதால் பாஸ்போர்ட் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் உள்ளது. வெளிநாட்டுக்கு தப்பியிருந்தால் தூதரகங்கள் மூலம் அவரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்