புதுடெல்லி:
நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு வரம் 16ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், குற்றம் நடைபெற்ற 7 ஆண்டுகளுக்கு பின்னர் திகார் சிறையில் உள்ள 4 குற்றவாளிகளுக்கு வரும் 16ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
தூக்கு தண்டனையை நிறைவேற்ற 2 பேரை உத்தரப்பிரதேசம் திகார் சிறைக்கு அனுப்புகிறது. தூக்கு தண்டனை நிறைவேற்றும் பணிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.