புதுடெல்லி:
டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளின் கருணை மனுக்களை டெல்லி ஆளுநர் நிராகரித்துள்ளார்.
கடந்த 2012ல் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில், 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த 6 பேரில் ஒருவன் மைனர் என்பதால் தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்டான். மேலும், முக்கிய குற்றவாளியான ராம்சிங் என்பவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டான். மீதமுள்ள பவன்குப்தா, முகேஷ்சிங், தனேஷ் சர்மா, அக்ஷய்தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், 4 குற்றவாளிகளும் தங்களின் தூக்குத்தண்டனையை குறைக்குமாறு டெல்லி ஆளுநருகு கருணை மனு அளித்திருந்தனர். இந்த கருணை மனுவை ஆளுநர் இன்று நிராகரித்துள்ளார். மேலும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற பரிந்துரை செய்துள்ளார்.