புதிய பாடப்புத்தகங்கள் விற்பனை துவங்கியது!

புதிய பாடப்புத்தகங்கள் விற்பனை துவங்கியது!

சென்னை:

தமிழகத்தில் அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தற்போது புதிய பாடப்புத்தகங்கள் விற்பனை சென்னை பள்ளிக்கல்வி அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.

6,7,8,10 மற்றும் 12ம் வகுப்புக்களுக்கான புதிய பாடப்புத்தகங்களின் விற்பனை இன்று சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி அலுவலகத்தில் தொடங்கியது. மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

12ம் வகுப்பில், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட சில முக்கிய பாடங்களுக்கு 2 தொகுதிகளுக்கு பதிலாக ஒரே பாட புத்தகம் தயார் செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு 5 கோடி பாட புத்தகங்கள் அனுப்பும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக பாடநூல் கழக அதிகாரிகள் தெரிவித்துள்னர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்