சென்னை:
தமிழ் சினிமாவில் தற்போது விக்னேஷ் சிவனம் – நயன்தாரா காதல் கதை தற்போது படமாக தயாராகப்போகிறது.
சினிமா உலகில் ரசிகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவது நயன்தாரா -வி க்னேஷ் சிவன் காதல். கடந்த சில ஆண்டுளாக இவர்களுக்குள் காதல் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் இவர்களின் காதல் முறிந்துவிட்டதாக செய்திகள் பரவ அதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தனர்.
இந்நிலையில், நயன்தாரா- விக்னேஷ்சிவன் காதல் கதையை ‘நானும் சிங்கிள் தான்’ என்ற தலைப்பில் படமாக எடுக்கவுள்ளதாக இயக்குனர் கோபி கிருஷ்ணாவும் உறுதிப்படுத்தியுள்ளார். அட்டகத்தி தினேஷ், தீப்தி திவேஸ், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா ஆகியோர் நடிக்கின்றனர்.