தம்பதியை கொலை செய்த 2 கல்லூரி மாணவர்கள்..! 2 வருடம் கழித்து கைது..!!

தம்பதியை கொலை செய்த 2 கல்லூரி மாணவர்கள்..!  2 வருடம் கழித்து கைது..!!

மண்ணச்சநல்லூர் அருகே கடந்த 2018 ம் ஆண்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவன் மனைவி ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு வீட்டிலிருந்த 10 சவரன் நகை மற்றும் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற கொலையாளிகளை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பெரகம்பி ஊராட்சியினைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் ரமேஷ் (வயது36). இவரது மனைவி லதா ( வயது 33). இவர்களுக்கு கடந்த 2014 ம் ஆண்டு திருமணம் ஆனது. திருமணம் முடிந்து பெரகம்பி வாழையூர் சாலையில் உள்ள இவரது தோட்டத்தில் புதிதாக வீடுகட்டி லதாவும் ரமேவும் வசித்து வந்தனர்.

இந்நிலையில் 24.04.2018 ம் ஆண்டு செவ்வாய் கிழமை காலை அப்பகுதியில் சென்றவர்கள் வீட்டின் வெளியே கணவன் மனைவி ரத்த காயங்களுடன் கிடப்பதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். லதா பலத்த காங்களுடன் சடலமாகவும், ரமேஷ் ரத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார்.

அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதித்து சிசிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து சிறுகனூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் தனியாக வசித்து வந்த கணவன், மனைவி இருவரும் வீட்டிற்கு வெளியே வாசலில் தனித்தனியாக இரண்டு கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்கி கொண்டிருந்தனர் .

அதிகாலையில் மர்மகும்பல் அரிவால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர் . இதில் லதா சம்பவ இடத்திலேயே இறந்தார். மயங்கி நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரமேஷ் இறந்துவிட்டதாக நினைத்து கொள்ளையர்கள் 10 சவரன் நகை மற்றும் ரமேஸின் இருசக்கர வாகனத்தினையும் எடுத்துக் கொண்டு தப்பி ஓடியது தெரிய வந்த்தது.

இந்த சம்பவம் குறித்து சிறுகனூர் போலிஸார் மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல ஹக் உத்தரவின் கீழ் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலையான ரமேஷின் திருடுப் போன இருசக்கர வாகனம் பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியில் விபத்து ஏற்பட்டது.

விபத்தில் காயமடைந்த்து சிறுகனூர் அருகே வாழையூர் பகுதியினைச் சேர்ந்த கண்ணன் மகன் பழனிசாமி ( வயது 21) என்பது தெரியவந்தது. அவரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை செய்ததில் பழனிசாமி அவரது நண்பர் பெரம்பலூர் மாவட்டம், சத்திரமணி பகுதியைச் சேர்ந்த நிசாந்த் ( வயது 21) என்பதும் இருவரும் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருவதும், நகைக்காக கணவன் மனைவி கொலை செய்த தாவும் போலீஸார் வீசாரணையில் தெரியவந்தது.

மேலும் கொலை வழக்கில் கைதான இருவரும் சேர்ந்து, கொலை வழக்கில் கைதான பழனிசாமி யின் தம்பி பெருமாளை கடந்த 2017ம் ஆண்டு கொலை செய்தது தெரிய வந்தது. சிறுகனூர் போலீஸார் கொலையாளிகள் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்