ஷமியை கைதுசெய்ய இடைக்கால தடை

  • In Sports
  • September 10, 2019
  • 197 Views
ஷமியை கைதுசெய்ய இடைக்கால தடை

கொல்கத்தா:

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை கைது செய்ய இடைக்கால தடைவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் தொடர்ந்த வழக்கில், 15 நாட்களுக்குள் நேரில் ஆஜராகவேண்டும். ஆஜராகவில்லை எனில் முகமது ஷமியை கைது செய்ய காவல் துறைக்கு கடந்த 2ம் தேதி அலிப்பூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதித்துறை நடுவர் உத்தரவை எதிர்த்து முகமது ஷமி தரப்பில் மாவட்ட நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி முகமது ஷமியை கைது செய்ய இடைக்கால தடை விதித்து, நவம்பர் 2ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்