படிக்கட்டில் தவறி விழுந்த மோடி

படிக்கட்டில் தவறி விழுந்த மோடி

கான்பூர்:

உத்தரப்பிரதேசம் சென்றிருந்த பிரதமர் மோடி, நிகழ்ச்சியொன்றில் பிரதமர் படியில் தவறி விழ முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள சந்திரசேகர் ஆசாத் வேளாண் மற்றும் தொழில்நுடப்ட பல்கலைக்கழகத்தில் கங்கை நதி தூய்மைபடுத்துவதற்கான தேசிய கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். அம்மாநில முதல் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.

கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் உத்தரப்பிரதேசத்தில் இன்று நடந்தது. கான்பூர் சந்திரசேகர் ஆசாத் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.

பிரதமர் மோடி உளிட்டோர் கங்கை நதியில் படகில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய பின், படியில் பிரதமர் மோடி ஏறும்போது கால் தடுக்கி கீழே விழ முயன்றார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமருக்கு உதவி செய்தனர். இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்