காசியாபாத்:
காசியாபாத்தில் திடீரென சாலையில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியதில் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் அருகே உள்ள சதர்பூரில் கிழக்கு புறவழி அதிவேக சாலையில், மினி விமானம் ஒன்று திடீரென தரையிறக்கப்பட்டது. அந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும்போது, சாலையின் ஓரமாக தரையிறங்கி முன்பக்க சக்கரம் உடைந்து நிற்கிறது.
இதனால், வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அசாம்பாவிதம் ஏதுமின்றி விமானமும் பத்திரமாக தரையிறங்கியது. தரையிறங்கிய விமானத்தை வாகன ஓட்டிகள் ஏராளமானோர் அங்கு கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
A helicopter made an emergency landing on Eastern Peripheral Expressway near Ghaziabad’s Sadarpur village today. pic.twitter.com/Dkz1VT2sAo
— NDTV (@ndtv) January 23, 2020