சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், இலவசமாக 13 வகையான மதிய உணவு மற்றும் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு தினமும் காலையில் ஒரு கப் பால் வழங்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே, இத்திட்டம் பரிசீலிக்கப்பட்டு நடைமுறை சிக்கலால் வைவிடப்பட்டது. தற்போது மீண்டும் பால் வழங்கும் திட்டத்தை அரசு ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.