கார்டோம்:
சூடான் நாட்டில் பீங்கான் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இந்தியர் உட்பட 23 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
சூடான் நாட்டின் கார்டோமில் உள்ள பஹ்ரி என்ற இடத்தில் சலோமி பீங்கான் தொழிற்சாலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இந்தியர்கள் உள்ளிட்ட 23 பேர் பலியாகியுள்ளதாகவும், 130க்குமு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து குறித்த விபரங்களை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. அதன் படி, தற்போது 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்துக்க விரைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவலுக்காக +249 921917471 என்ற உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது.
At least #18Indians were among the 23 people killed and over 130 injured in a horrific #LPG tanker blast at a #CeramicFactory in #Sudan, the Indian mission in #Khartoum said. pic.twitter.com/ZVyTteZNmQ
— JUST IN | (@justinbroadcast) December 4, 2019