ஒருதலை காதல்; பேருந்திலேயே தாலி.. தர்ம அடி

ஒருதலை காதல்; பேருந்திலேயே தாலி.. தர்ம அடி

ஆம்பூர்:

ஒருதலை காதலால் ஓடும் பேருந்திலேயே தாலி கட்டிய இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் சான்றோர்குப்பத்தை சேர்ந்தவர் ஜெகன். இவர் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணை கல்லூரி படிக்கும்போதே ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு சமீபத்தில் நிச்சியதார்த்தம் முடிந்த நிலையில், ஜெகன் அந்த பெண்ணிடம் காதலை தெரிவித்துள்ளார். ஆனால் காதலை ஏற்க அந்த பெண் மறுத்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண் இன்று காலை பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஜெகன் அந்த பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டியுள்ளார். உடனே அந்த பெண்ணின் கூச்சலை கேட்ட சக பயணிகள், ஜெகனை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்