ஒசூர்:
கிருஷ்ணகிரி அருகே கண்டெய்னர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கிருஷ்ணகிரி அடுத்த காவேரிப்பட்டினம் அருகே உள்ள பெத்தாபுரம் என்ற கிருஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில், டெல்லியிலிருந்து சேலத்திற்கு ‘போலோ மிட்டாய்’ கன்டெய்னர் லாரி ஏற்றி வந்தது.
லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தகவலறிந்த காவேரிப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர்.