அமைச்சர் கேபி.அன்பழகனின் உடல்நிலை பின்னடைவு

அமைச்சர் கேபி.அன்பழகனின் உடல்நிலை பின்னடைவு

கொரோனா பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக அமைச்சர் கே.பி.அன்பழகன் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாத் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் கொரோனாத் தொற்றை மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடைசியில் அவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. தற்போது தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தினமும் பூண்டுப்பால், கபசுர குடிநீர் உள்ளிட்டவற்றை அவர் எடுத்து வருகிறார். உடல்நிலை இயல்பாகவே உள்ளது என்று கூறப்பட்டு வந்தது.இந்த நிலையில் அன்பழகனுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. வயதும் 60ஐ கடந்துவிட்டது. அதனால் கொரோனா அவருக்கு தீவிரமாக உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் என்ன மருந்து கொடுத்தாலும் கொரோனா சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்தி வெளியாகி உள்ளது. அனைத்து வதந்திகளையும் முறியடித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் விரைவில் வீடு திரும்புவார். ஒருவாரத்தில் அவர் வீட்டுக்குத் திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்