ஒசூர்:
ஒசூர் அடுத்த கெலமங்கலம் ஒன்றியத்தில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சி மன்றங்களுக்கு தலைவர் பதவிக்கும், ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கும் இன்று 4வது நாளாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இன்று பைரமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பிரதிமா கோபாலரெட்டி, தொட்ட மெட்டறை பஞ்சாயத்தில் யசோதா உட்பட ஊடேதுர்க்கம், குந்துமாரணப்பள்ளி ஆகிய பஞ்சாயத்துக்களை சேர்ந்தோர் வேட்புமனுக்களை செய்து வருகின்றனர்.