சென்னை:
‘காவலன் எஸ்ஓஎஸ்’ செயலியை 5 நாட்களில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், மருத்துவ கல்லூரி மற்றும் நர்சிங் மாணவிகளுடன் ‘காவலன் எஸ்ஓஎஸ்’ செயலி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய ஏ.கே.விஸ்வநாதன், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பாலியல் வன்கொடுமை மிகக்குறைவு என்றும், சென்னை தான் மிகவும் பாதுகாப்பான நகரம் என்றும் தெரிவித்தார். குற்றங்களே இல்லாத சூழல் உருவாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.