பிறந்தநாளுக்கு தந்தைக்கு கடிதம் எழுதிய கார்த்தி

பிறந்தநாளுக்கு தந்தைக்கு கடிதம் எழுதிய கார்த்தி

டெல்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு இன்று 74வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி., கடிதம் எழுதி உள்ளார்.

2 பக்கங்கள் கொண்ட கடிதத்தில், ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு நடந்த பல்வேறு நிகழ்வுகளை விளக்கியதுடன், பாஜக அரிசின் 100 நாள் செயல்பாடுகள், பிரதமர் மோடியின் 56 இஞ்ச் மார்பளவை சுட்டிக் காட்டியுள்ளார்.

கார்த்தி சிதம்பரம் எழுதிய கடிதத்தில், அப்பா, நீங்கள் இன்று 74 வயதை அடைந்துள்ளீர்கள். உங்களை எந்த 56லும் தடுத்து நிறுத்த முடியாது.

உங்களுக்கு எப்போதுமே உங்களுடைய பிறந்தநாளை பிரம்மாண்டமாகக் கொண்டாடுவதில் விருப்பம் இருந்ததில்லை.

இந்தப் பிறந்த நாளில் நீங்கள் எங்களுடன் இல்லை என்பது எங்களுக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது.

எங்கள் அனைவருடனும் இணைந்து கேக் வெட்ட, நீங்கள் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறோம். என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்