கமல் பிரச்சாரத்திற்கு தடை கோரி பெண் மனு!

கமல் பிரச்சாரத்திற்கு தடை கோரி பெண் மனு!

கோவை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், சூலூரில் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினரான பாலமுருகன், தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றபோது உயிரிழந்தார். தன் கட்சியின் தொண்டர் இறந்ததை பற்றி கமல் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.

தொண்டர்களையே கண்டுகொள்ளாத கமல், மக்கள் பிரச்சனைகளை எப்படி தீர்த்து வைப்பார் எனவும், சூலூரில் கமல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் பாலமுருகனின் மனைவி கோவை மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளார்.

இந்த புகார் மனுவால், மக்கள் நீதி மய்யம் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்