கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்: மோடி ஆணித்தரம்

கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்: மோடி ஆணித்தரம்

லடாக்கில் உள்ள கல்வான்பள்ளத்தாக்கு பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய வீரர்களை சீன வீரர்கள் கடுமையாக தாக்கினர். இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீன தரப்பில் உயிர்சேதம் இரண்டு மடங்காக இருந்தும் அந்நாட்டு அரசு மவுனம் காக்கிறது. இதனால், எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதனை குறைக்க இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, இன்று திடீர் பயணமாக லடாக் சென்றார்.அவருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே உடன் இருந்தனர். லே வில் உள்ள நிமு பகுதிக்கு சென்ற மோடி, ராணுவ வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிரதமர் வந்த போது, வீரர்கள், ”வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜே” என உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.வீரர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, அவர்கள் மத்தியில் பிரதமர் மோடிபேசியதாவது: நமது வீரர்களின் வலிமை இமயத்தை விட உயர்ந்தது. பாறாங்கற்கள் போன்ற மன உறுதியுடன் எல்லையை நமது வீரர்கள் காத்து வருகின்றனர்.

உங்களின் வீரம், நீங்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் மலையை விட உயரமானது .வீரர்களின் வீரம், தைரியம் மூலம் ஒட்டு மொத்த உலகத்திற்கும் இந்திய ராணுவம் முக்கியமான மற்றும் வலுவான தகவலை அளித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு, ராணுவ வீரர்களான உங்களின் கைகளில் தான் உள்ளது. வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவும் இல்லை. ஒட்டு மொத்த இந்திய மக்களின் நம்பிக்கை நமது ராணுவ வீரர்கள் தான்.

உங்களின் வீரத்தால் மக்கள் பெருமை கொள்கின்றனர். உங்களின் தியாகம் மற்றும் வீரத்தால் தேசம் தலைநிமிர்ந்து நிற்கிறது.நமது எதிரிகளின் ஒவ்வொரு திட்டத்தையும் தவிடுபொடியாக்கி வருகிறோம். நமது நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. நமது வீரர்களின் செயலுக்கு தலை வணங்குகிறேன்.

நாடு தற்போது உடைக்க முடியாத நம்பிக்கையை கொண்டுள்ளது. இந்திய நாட்டை காக்க உயிர் இழந்தவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்துகிறேன். எதையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. நாட்டின் எதிரிகளுக்கு உரிய பாடம் புகட்டியுள்ளீர்கள்.

இந்திய வீரர்களின் தைரியம், மன தைரியத்தை கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள். எதிரிகளின் எந்த திட்டமும் நம்மிடம் பலிக்கவில்லை. நமது வீரர்களுக்கு லடாக் மக்கள் உறுதுணையாக உள்ளனர். லடாக்கில் பயங்கரவாதத்தை உருவாக்க முயன்ற எதிரிகளின் சதி, தேசபக்தி கொண்ட மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதில் மாற்றமில்லை.சியாச்சின் முதல் கல்வான் உள்ள வரை நமது நமது கட்டுபாட்டில் உள்ளது.

தற்போது நாம் எதிர்கொண்டுள்ள சவால் நம்மை வலுப்படுத்தியுள்ளது. இந்தியா அமைதியை விரும்பக்கூடிய நாடு என்பதை உலகம் அறியும். வீரம் என்பது அமைதியை நோக்கி செல்வது, அமைதியை எதிர்பார்ப்பது. பலவீனமாக உள்ளவர்கள், அமைதிக்கான நடவடிக்கையை துவங்கமாட்டார்கள்.

அமைதியை எதிர்பார்த்தாலும் நமது நிலத்தை பாதுகாக்கும் விவகாரத்தில் அச்சம் கொள்ளப்போவதில்லைராணுவ வீரர்கள் தீர்க்கமாக உள்ளது அவர்களின் முகத்தை பார்க்கும்போது தெரிகிறது. கடந்த காலங்களில் பல எதிரிகளுடன் போரிட்டு வருகிறோம். நமது வீரம் வழிவழியாக வந்த வரலாறு கொண்டது. இந்திய ராணுவத்தின் நெருப்பு போன்ற ஆக்ரோஷத்தை எதிரிகள் பார்த்துள்ளனர்.

நாடு பிடிக்கும் கொள்கைக்கு இந்த உலகம் எதிராக உள்ளது. நாடு பிடிக்கும் காலம் மலையேறி சென்றுவிட்டது. ஒவவொரு நாடும் தற்போது முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றன. எல்லை பகுதியில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது முழுவீச்சில் நடக்கும்.அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் எல்லையில் ராணுவம் ஒருங்கிணைந்து செயல்பட முடியும். நாம் புல்லாங்குழல் வைத்துள்ள கிருஷ்ணர்கள் தான்; அதே சமயம் நம்மிடம் சுதர்சன சக்கரமும் உள்ளது.அமைதியை விரும்பும் நாம் தேவைபட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்க தயங்க மாட்டோம். நாட்டை அபகரிக்க்க பேராசையுடன் செயல்பட்டோர் எப்போதும் வீழ்ச்சியை தான் சந்தித்துள்ளனர். இவ்வாறு பிரதமர் பேசினார்.திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர்பிரதமர் மோடி தனது பேச்சின் போது,மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்எனநான்கே ஏமம் படைக்குஎன்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்