வேலைவாய்ப்புக்கு ஏற்ப திறமை: இளைஞர்களுக்கு பிரதமர் அறிவுரை

வேலைவாய்ப்புக்கு ஏற்ப திறமை: இளைஞர்களுக்கு பிரதமர் அறிவுரை

வேலைவாய்ப்புக்கு ஏற்ப திறமை: இளைஞர்களுக்கு பிரதமர் அறிவுரைமாற்றம் செய்த நாள்: ஜூலை 15,2020 புதுடில்லி: வேலைவாய்ப்புக்கு ஏற்ப இளைஞர்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். அதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்றியதாவது; உலக இளைஞர்கள் திறன் தினத்தை முன்னிட்டு, அனைத்து இளைஞர்களுக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன். கொரோனா காலத்தில், நமது பணி கலாசாரம், பணியின் தன்மை ஆகியவை மாறிவிட்டது. எப்போதும் மாறாத தொழில்நுட்பமும் கூட மாறிவிட்டது. ஆனால், இந்த சவாலான நேரத்தில், இளைஞர்கள் புதிய திறனை வளர்த்து கொள்கின்றனர்.திறமை என்பது, நமக்கு நாமே அளிக்கும் பரிசு ஆகும். அது அனுபவம் மூலம் வளர்கிறது. திறமை என்பது தனித்துவம் மிக்கது. அது மற்றவர்களிடம் இருந்து உங்களை வேறுபடுத்தி காட்டுகிறது.சிலர், அறிவுக்கும், திறமைக்கும் இடையே சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி கொள்வார்கள். அவர்களுக்கு நான் சொல்வது, சைக்கிளை எப்பட ஓட்டுவது என புத்தகத்தில் படிக்கலாம். இணையத்தில் பார்க்கலாம். அது அறிவு. ஆனால், அதன் மூலம் உங்களால் சைக்கிளை ஓட்டிவிட முடியும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அதற்கு, திறமை வேண்டும்.
வேலைவாய்ப்புக்கு ஏற்ப இளைஞர்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கு ஏற்ப பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணம் சம்பாதிக்க மட்டும் திறமையை வளர்த்து கொள்ளக்கூடாது. ஒரு திறமையான நபர் தனது வாய்ப்புகளை எந்த வகையிலும் விட்டுவிடக்கூடாது. திறமை என்பது வெறும் பணம் சம்பாதிப்பதற்கான வழி மட்டுமல்ல. அது உற்சாகம் அளிக்கக்கூடியதும் கூட.வேலை மட்டுமின்றி செல்வாக்கு, ஊக்கம், திறன் போன்றவற்றை வழங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்