சாய் பயிற்சி மையத்தில் இந்திய வீரர் வீராங்கணைகள் பயிற்சி

  • In Sports
  • May 28, 2020
  • 175 Views
சாய் பயிற்சி மையத்தில் இந்திய வீரர் வீராங்கணைகள் பயிற்சி

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக இந்திய வீரர், வீராங்கனைகள் வெளிப்புற மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் தங்களது அறையில் முடங்கி கிடந்தனர். சர்வதேச போட்டிக்கு தயாராகும் வீரர்கள் அரசு வெளியிட்டு இருக்கும் வழிகாட்டுதல் நடைமுறைகளை பின்பற்றி வெளிப்புற மைதானத்தில் பயிற்சியை தொடங்கலாம் என்று கடந்த வாரம் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து பாட்டியாலா மற்றும் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) பயிற்சி மையத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் நேற்று தங்களது பயிற்சியை தொடங்கினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்