ஒசூரில் 30 ஆண்டுகளாக கலக்கி வந்த பிரபல ரவுடி காலமானார்

ஒசூரில் 30 ஆண்டுகளாக கலக்கி வந்த பிரபல ரவுடி காலமானார்

ஒசூரை கலக்கிய பிரபல ரௌடி கொர கோபி கோவை தனியார் மருத்துவமனையில் உயிரிழப்பு

ஒசூரை கலக்கிய பிரபல ரௌடி கொர கோபி என்பவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

ஒசூர் ராம்நகரை சேர்ந்தவர் கோபி என்கிற கொர கோபி, இவர் ஒசூர் பகுதியையே கலக்கிய பிரபல ரௌடி, இவர் மீது ஆள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஒசூர் பகுதிகளில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் உள்ளன. ஒசூர் பகுதியில் வாழும் வசதி படைத்தவர்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பவர்.

சர்க்கரை வியாதி நோயால் பாதிக்கப்பட்டு வந்த இவருக்கு ஒரு கால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர்களால் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கோவையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கொர கோபில இன்று உயிரிழந்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்