அரசு பேருந்து மோதல்; தாய், மகன் பலி

அரசு பேருந்து மோதல்; தாய், மகன் பலி

ஒசூர்:

ஒசூர் அருகே அரசுப்பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் வந்த தாய், மகன் இருவரும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அவதானப்பட்டியிலிருந்து அரிசி உள்ளிட்ட பொருட்களுடன் தாய் மஞ்சுளா(35) 6 வயது மகனான அனில் உடன் இருவரும் இருசக்கர வாகனத்தில் பெங்களூரு நோக்கி வந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கோனேரிப்பள்ளி என்னுமிடத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த அரசு விரைவுப்பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த தாய் மற்றும் மகன் இருவரும் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சூளகிரி போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்