ஹெல்மட் அணியாத 1.18 லட்சம் பேர்

ஹெல்மட் அணியாத 1.18 லட்சம் பேர்

சென்னை:

தமிழகம் முழுவதும் நடந்த வாகன சோதனையில், கடந்த 2 நாட்களில் மட்டும் 1,18,018 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையி, சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்கவும், போக்குவரத்து விதி மீறல்கள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

அதன்படி, கடந்த 14 மற்றும் 15ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த சோதனையில், ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 1,18,018 பேர் மீது வழக்குப்பதிந்துள்ளதாகவும், சீட்பெல்ட் அணியாமல் சென்றதாக 36,835 பேர் மீதும், போதையில் வாகனம் ஒட்டியர்கள் 28 பேர் மீதும், குட்கா சட்டத்தின்படி 542 பேர் மீது வழக்குப்பதியப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்