சென்னை:
தமிழகத்தின் சில இடங்களில் பலத்த சூறைகாற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக கடும் வெயிலால் அவதிபட்டுவந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் சூறைகாற்றுடன் கனமழை பெய்யும். 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறைகாற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.