பஸ் டிரைவருக்கு மாரடைப்பு; உயிர் தப்பிய பயணிகள்

பஸ் டிரைவருக்கு மாரடைப்பு; உயிர் தப்பிய பயணிகள்

சென்னை:

சென்னையில் ஓடும் பேருந்திலேயே டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

சென்னை சிறுசேரி பகுதியிலிருந்து கோயம்பேடு சென்றுகொண்டிருந்த மாநகர பேருந்து, வேளச்சேரி அருகே சென்ற போது பேருந்தின் டிரைவர் ராஜேஷ்கண்ணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக பேருந்தை நிறுத்த முயன்றால், ஆனால், ஆக்சிலேட்டரில் கால் வைத்ததால் சாலையில் சென்றுகொண்டிருந்த கார்கள் மீது மோடியது. அப்போது, சாலையில் சென்றுகொண்டிருந்த ஒருவர் பேருந்தில் அவசரமாக ஏறி பிரேக் போட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஆனால், மாரடைப்பு ஏற்பட்ட பேருந்து ஓட்டுனர் ராஜேஷ்கண்ணா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்