சென்னை:
பெரியார் குறித்து அவதூறு பேசியதாக ரஜினி மீது தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் துக்ளக் ஆண்டு விழாவில், பெரியார் குறித்து அவதூறாக பேசிய ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், திராவிட விடுதலை கழகத்தின் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில், நடிகர் ரஜினிகாந்திற்கு எதிராக திராவிட அமைப்பு ஒருவர் தாக்கல் செய்த வழக்கை மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குச் செல்வதற்குப் பதிலாக உயர் நீதிமன்றத்திற்கு ஏன் விரைந்து செல்ல வேண்டும் எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.