திருமா பதிவிட்ட புகைப்படம் இந்த நபரை கைது செய்யக்கோரி எச்.ராசா ட்வீட்

திருமா பதிவிட்ட புகைப்படம் இந்த நபரை கைது செய்யக்கோரி எச்.ராசா ட்வீட்

திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், டொனால்ட் ட்ரம்ப் சம்மன் இல்லாமலே ஆஜராகத் துடிக்கிறார்.பாகிஸ்தானோடு உரசல்,சீனாவோடு சிக்கல் வரும்போதெல்லாம் பஞ்சாயத்து பண்ண ‘நான்ரெடி நீங்கரெடியா’என்கிறார்?அவர் மோடிக்குஆதரவாகப் பேசுகிறாரா?கிண்டல் பண்ணுகிறாரா?இந்திய-சீன எல்லையிலோ நம்படையினர் ‘திரும்பிபோ’எனபதாகை பிடிக்கின்றனர்! என தெரிவித்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதற்கு ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : இந்த பதாகை போலியானது. மோடி அவர்கள் மீது உள்ள வன்மத்தால் இந்திய ராணுவத்தை அவமானம் செய்துள்ள இந்த நபரை அரசு உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்