ரூ.7 லட்சம் குட்கா பறிமுதல்

ரூ.7 லட்சம் குட்கா பறிமுதல்

ஒசூர்:

காரில் கடத்தப்படவிருந்த 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து 3 பேரை ஒசூர் சிப்காட் போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சிப்காட் போலிசார், மாநில எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கர்நாடகாவிலிருந்து கிருஷ்ணகிரி பகுதிக்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா,பான் மசாலாக்களை காரில் கடத்தவிருப்பதாக வந்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஒசூர் கோவிந்த அக்ரகாரம் பகுதியில் வந்த காரை பரிசோதித்ததில் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருப்பதை உறுதி செய்தனர்.

காரில் இருந்த விந்தேந்தர்,உக்காரம்,முக்தர் ஆகிய மூவரை செய்து, கடத்தப்படவிருந்த கார் உட்பட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து கைது செய்யப்பட்டவர்களிடம் ஒசூர் சிப்காட் போலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்