சென்னை:
இந்தி மொழியை கட்டாயமாக்குவது தவறில்லை என நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள பல மாநிலங்களில் இந்தி மொழி பேசப்பட்டு வருவதால் இந்திய மக்கள் இணைவதற்கு இந்தி வழிவகுக்கும் எனவும், எதிர்காலத்திற்கு நல்லது என்பதால் இந்தி கட்டாயப்படுத்துவது தவறிலை என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
இந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து தவறில்லை என்றும் தாய்மொழிக்கும் தேசிய மொழிக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.