சென்னை:
சென்னையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்று வந்த கும்பல் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகரை பொறுத்தவரையில் அண்மைக்காலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அதிகமாக கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மாணவர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அதன் அடிப்படையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சிங்கராஜ் என்பவர் சிக்கினார்.
மதுரையை சேர்ந்தவர் சிங்கராஜ் சென்னை அடையாறில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் கஞ்சா பொட்டலங்களாக தயாரித்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.
மேலும், அவரது கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.