மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

ஒசூர்:

ஒசூர் அருகே அரசுப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில்விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த பாகலூரில் இயங்கி வரும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 11ம் வகுப்பு படித்துவரும், 234, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

கிராம புறங்களில் போக்குவரத்து வசதியற்ற மாணவர்களையும், இடைநிற்றலை தடுக்கவும் அம்மா அவர்களின் சாதனை திட்டங்களுள் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தற்போதைய முதல்வரும் வழங்கி வருவதாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தமிழக அரிசன் திட்டங்களை எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஒசூர் ஒன்றிய குழுதலைவர் சசி வெங்கடசாமி, பெற்றோர் கழக ஆசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோரும் மிதிவண்டிகளை வழங்கினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்