விடுதலைப்புலிகள் தோற்கடித்ததே சிறந்த நாள்

விடுதலைப்புலிகள் தோற்கடித்ததே சிறந்த நாள்

கொழும்பு:

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கயின் சிறந்த நாள் என முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கொழும்புவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முரளிதரன், சமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப்புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது எனவும், ஆனால் அவர்கள் வாய்ப்பை தவறவிட்டு விட்டதாகவும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2009ம் ஆண்டில் நடைபெற்ற யுத்தத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக சிறந்த நாள் எனவும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் அச்சத்தின் பிடியில் இலங்கை மக்கள் இருந்ததாகவும் விடுதலை புலிகள் அழிவிற்கு பிறகே அச்சமின்றி நடமாட முடிந்த‌தாகவும் முரளிதரன் கூறியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்