கொச்சி:
இந்திய கடற்படையின் முதல் பெண் பைலட்டாக ஷிவாங்கி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்திய கடற்படையின் முதன் முதல் பெண் பைலட்டாக உதவி லெப்டினட் சிவாங்கி இன்று கொச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார். கொச்சி விமானப் படை தளத்தில் பணியில் இணைந்த அவர், டோர்னியர் விமானத்தில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.