பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கு, இத்தனை போலி கணக்குகளா?

பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கு, இத்தனை போலி கணக்குகளா?

பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை பின் தொடர்பவர்களில் 2 கோடிக்கு மேல் போலியான கணக்காளர்கள் என ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய பிரதமரான நரேந்திர மோடி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பாலோயர்ஸ் உண்டு. அவரும் டிவிட்டரில் தீவிரமாக இயங்கி தன்னுடைய கருத்துகளை அவ்வப்போது தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு 4 கோடிக்கும் அதிகமாக பாலோயரஸ் இருக்கின்றனர். இந்தியாவிலேயே அதிகமாக பாலோயர்ஸ் கொண்ட பிரபலம் மோடிதான்.

ஆனால் அந்த 4 கோடி பேரும் முறையாகக் கணக்கு வைத்திருப்பவர்கள் அல்ல. டிவிப்ளோமசி என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் அவரது கணக்கைப் பின் தொடர்பவர்களில் 60 சதவீதத்துக்கும் மேலானவர்கள் போலியானவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.டிவிப்ளோமசி நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் டிவிட்டர் அல்காரிதம், சம்மந்தப்பட்ட நபர் கடைசியாக பதிவு செய்த டிவிட் மற்றும் அவர்கள் வேறு யார் யாரை பாலோ செய்கிறார்கள் போன்றவற்றை வைத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது மாதிரியான போலி பாலோயர்கள் மோடிக்கு மட்டுமல்லாமல் உலக தலைவர்களான ட்ரம்ப், போப், ராகு காந்தி ஆகியோருக்கும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்