முதல்வருக்கே பிறந்த இடம் தெரியாது; அவருக்கும் சேர்ந்தே போராடுகிறோம்: ஸ்டாலின்

முதல்வருக்கே பிறந்த இடம் தெரியாது; அவருக்கும் சேர்ந்தே போராடுகிறோம்: ஸ்டாலின்

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் இன்று (26ம் தேதி) நடைபெற்ற கட்சி பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:அ.தி.மு.க., – பா.ம.க., கட்சிகள் ஆதரவளித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால், சி.ஏ.ஏ.,வை நிறைவேற்றியிருக்க முடியாது. சி.ஏ.ஏ.,வால் முஸ்லிம்கள், இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்து மதத்தில் உள்ள பல்வேறு தரப்பு மக்களுக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. நாம் பிறந்த தேதி, எங்கே பிறந்தோம் என்பதை மட்டுமல்லாமல் நம் பெற்றோர், தாத்தா, பாட்டி எங்கே பிறந்தனர் என்பதையும் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.அப்படி சொல்லாதவர்களை சந்தேகத்துக்குரியவர்கள் என்ற பட்டியலில் இணைத்து விடுவர்.அந்தப் பட்டியலில் இந்தியாவில் உள்ள 60 சதவீதம் பேர் இணைவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது.முதல்வர் பழனிசாமியை, பல்வேறு தரப்பினரும் சந்தித்து, சி.ஏ.ஏ.,வை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு வலியுறுத்தினர். அப்போது இதில் உள்ள சந்தேகங்களை முதல்வரிடம் தெரிவித்துள்ளனர்.அதற்கு அவர், ‘நான் எங்கே பிறந்தேன் என எனக்கே தெரியாது. அதற்கான ஆவணங்கள் என்னிடம் இல்லை’ என, தெரிவித்துள்ளார். எனவே, முதல்வருக்கும் சேர்த்துத்தான் போராடுகிறோம்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்